Wednesday, April 8, 2026

Abheethi Stavam - 26 - ஒரே ரக்ஷகன் திருவரங்கன் – Only Saviour Ranganathan

   श्री:

जय गरुड सुपर्ण 
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 4.श्री अभीतिस्तवः Abheethi Stavam ஸ்ரீ அபீதிஸ்தவம்

 26 - ஒரே ரக்ஷகன் திருவரங்கன் – Only Saviour Ranganathan

विधिस्त्रिपुरमर्दनस्त्रिदशपुङ्गवः पावकः 
यम प्रभृतयोऽपि यद्विमत रक्षणे न क्षमाः । 
रिरक्षिषति यत्र च प्रतिभयं न किञ्चित् क्वचित् 
स नः प्रतिभटान् प्रभो शमय रङ्गधामादिषु ॥ 26 ॥

पदच्छेदः
विधि: त्रिपुर मर्दन: त्रिदश पुङ्गवः पावकः 
यम प्रभृतय: अपि यत् विमत रक्षणे न क्षमाः । 
रिरक्षिषति यत्र च प्रतिभयं न किञ्चित् क्वचित् 
स: नः प्रतिभटान् प्रभो शमय रङ्गधामादिषु ॥ 26 ॥

प्रभो - ப்ரபுவே!
विधि: - பிரமனும் 
त्रिपुर मर्दन: - த்ரிபுராசுரனைக் கொன்ற சிவனும் 
त्रिदश पुङ्गवः - தேவர் தலைவனான இந்திரனும் 
पावकः - அக்நிதேவனும்
यम प्रभृतय: अपि - யமன் முதலிய தேவர்களும் 
यत् विमत - எவனுக்கு எதிரியாயிருப்பவனை
रक्षणे - காப்பதில்
न क्षमाः - சக்தியுடையரல்லரோ 
यत्र च - எவன்
रिरक्षिषति - (ஒருவனைக்) காக்க விரும்பினால் 
क्वचित् - எங்கும் 
प्रतिभयं  किञ्चित् न - அச்சத்தைத் தருவது எதுவும் இல்லையோ 
स:  - அத்தகைய நீ 
रङ्गधामादिषु - திருவரங்கம் முதலிய இடங்களிலுள்ள
नः प्रतिभटान् - நம் எதிரிகளை
शमय – அடக்குவாயாக

ஒரே ரக்ஷகன் திருவரங்கன்

திருவரங்கப்பெருமானே ! உன்னிடம் அபசாரப்பட்டு எதிரியாய் நிற்பவனைப் பிரமதேவனோ, சிவனோ, இந்திரனோ, அக்நியோ, யமனோ, மற்றுமுள்ள தேவர்களில் ஒருவனோ, எல்லோரும் ஒன்று கூடியோ காக்க முடியாது. நீ ஒருவனைக் காக்க விரும்பிவிட்டால் அவனுக்கு எந்த இடத்திலும் எவனும் சிறிதளவும் தீங்கு செய்ய முடியாது. இத்தகைய பெருமையுற்ற நீ திருவரங்கம் முதலிய இடங்களில் நாங்கள் உன்னை அநுபவிக்க முடியாது எங்களுக்கு இன்னல் செய்யும் எதிரிகளை அடக்கியருள வேண்டும். 

Only Saviour Ranganathan

ஒரே ரக்ஷகன் திருவரங்கன்

திருவரங்கப்பெருமானே ! உன்னிடம் அபசாரப்பட்டு எதிரியாய் நிற்பவனைப் பிரமதேவனோ, சிவனோ, இந்திரனோ, அக்நியோ, யமனோ, மற்றுமுள்ள தேவர்களில் ஒருவனோ, எல்லோரும் ஒன்று கூடியோ காக்க முடியாது. நீ ஒருவனைக் காக்க விரும்பிவிட்டால் அவனுக்கு எந்த இடத்திலும் எவனும் சிறிதளவும் தீங்கு செய்ய முடியாது. இத்தகைய பெருமையுற்ற நீ திருவரங்கம் முதலிய இடங்களில் நாங்கள் உன்னை அநுபவிக்க முடியாது எங்களுக்கு இன்னல் செய்யும் எதிரிகளை அடக்கியருள வேண்டும். 

Only Saviour Ranganathan

O Lord Ranganatha! If someone commits an offense against You and stands as Your enemy, even Brahma, Shiva, Indra, Agni, Yama, or all the devas together cannot protect him. But if You decide to protect someone, no one anywhere can cause even the slightest harm to that person. Such is Your greatness. Therefore, please subdue those enemies who create obstacles and prevent us from experiencing You in Srirangam and other sacred places.




🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸